21 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம்

0
557

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 92 ரக பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே அதுவரை வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என மக்களுடன் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கு அமைய வாகனங்களை வைத்திருப்போர் fuel pass.gov.lk என்ற இணையதளத்துக்கு பிரவேசித்து தேசிய எரிபொருள் அட்டைக்காக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதே வேலை இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகல் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் ஆரம்பமாகும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.