ஹெல்மெட்டை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ்!

0
424

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸார் பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசி விட்டு, “அரகலயட்ட ஜயவே வா” (​ போராட்டத்துக்கு வெற்றி ) எனக் கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்துடன் கைக்கோர்த்துக்கொண்டார்.

பொலிஸ் மோட்டார் சைக்கிள் அவ்விடத்திலேயே நிற்கிறது. தலைக்கவசம் கீழே விழுந்து கிடக்கிறது.

பொலிஸ் அதிகாரியோ போராட்டக்காரர்களுடன் கைகோர்த்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிக்கின்றார்.

அவர், மஹரகமவில் வைத்தே போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டுள்ளார்.