ஹிருணிகாவுக்கு ராஜபக்சவினர் பயம்! வெளிவரும் பின்னணி

0
547

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சிங்கப் பெண் ஹிருணிகா சேலையைத்தானே உரிவீங்க. ஆம்பிளை மாதிரி வாரேன் என வந்துள்ளார்.

ஹிருணிகாவுக்கு ராஜபக்சவினர் உண்மையிலேயே பயம்தான். மஹிந்தவை மேடையில் வைத்துக் கொண்டு மஹிந்தவை அன்று விமர்சிக்கும் தைரியமானவராக ஹிருணிகாவின் அப்பா இருந்தார்.

ஹிருணிகாவின் அப்பாதான் மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவராக்கி, பிரதமர், ஜனாதிபதி என உயர உதவியவர். ஹிருணிகாவின் வாயை கிளறினால் நாறிடும். அதனால் யாருக்கு பயமில்லை என்றாலும் ஹிருணிகாவுக்கு ராஜபக்ச குடும்பம் பயம் தான். என அவர் கருத்தை பதிவிட்டுள்ளார்.