3,518 பேரின் கொலைக்கு உதவியதாக 101 வயது முதியவருக்கு சிறை தண்டனை விதித்த ஜேர்மனி!

0
380

2ஆம் உலகப்போரின்போது நாஜி படையில் காவலராக பணியாற்றிய 101 வயது முதியவர் 3,518 பேரின் கொலைக்கு உதவியதாக கூறி சிறை தண்டனை விதித்து ஜேர்மனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

2ஆம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் ஜேர்மனி தலைநகர் பெர்லினுக்கு அருகே வதை முகாம் அமைத்து 2 லட்சத்துக்கு அதிகமான கைதிகளை அடைத்து வைத்திருந்தனர்.

அங்கு அடைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் இறந்துள்ளனர்.

இன்னும் ஆயிரக்கணக்கானோர் துப்பாக்கிச் சூடு, தூக்கில் போடுதல் மற்றும் விச வாயுவை சுவாசிக்க வைத்தல் போன்ற தண்டனைகள் மூலம் கொல்லப்பட்டனர்.

இந்த சூழலில் நாஜி கால குற்றவாளிகள் மீது விசாரணை நடத்தி வரும் தற்போதைய ஜேர்மனி அரசு, நாஜி வதை முகாமில் காவலராக பணியாற்றிய 101 வயது முதியவருக்கு எதிராக கடந்த ஆண்டு விசாரணையை ஆரம்பித்தது.

அந்த முதியவர் 3,518 பேரை கொலை செய்ய உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கில் பெயர் விவரங்கள் வெளியிடப்படாத அந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜேர்மனி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.