ஜெர்மனியில் நீதிமன்ற வாசலில் வெட்டப்பட்ட மனித தலை கண்டுபிடிப்பு

0
599

ஜெர்மனியில் உள்ள Bonn என்ற பகுதியில் அமைந்திருக்கும் மாவட்ட கோர்ட் வளாகத்தின் வாசலில் வெட்டப்பட்ட மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை அடையாளம் தெரியாத நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர். இதனை பொலிசார் உடனடியாக அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே சமயம், வெட்டப்பட்ட தலை கிடந்த Bonn கோர்ட் வளாகத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலையில் உள்ள ரைன் நதிக்கரையில் தலையில்லாத உடல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.