110 பாம்புகளை வளர்த்து வந்த இளம்பெண்; பாம்பு கடித்த சம்பவம்

0
698

ஜேர்மன் நகரமொன்றில் தன் வீட்டின் அருகிலேயே பண்ணை ஒன்றை வைத்து 110 பாம்புகளை வளர்த்து வந்துள்ள இளம்பெண்ணிற்கு துயர சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சால்ஸ்கிட்டர் என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு வந்த 35 வயது பெண் ஒருவர் தன்னை பாம்பு ஒன்று கடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது நிலைமை மோசமாகவே Hamburg லுள்ள சிறப்பு நிறுவனம் ஒன்றில் பாம்புக்கடி மருந்துக்கு ஆர்டர் செய்த மருத்துவர்கள் பொலிஸாருக்கும் தகவலளித்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பண்ணைக்குச் சென்ற பொலிஸார் அங்கு ஏராளமான பாம்புகள் வளர்க்கப்பட்டு வருவதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவற்றில் 110க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

நிபுணர்கள் உதவியுடன் பாம்புகளைக் கைப்பற்றிய பொலிஸார் என்னென்ன விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.