நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்..!

0
364

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்டி எஸ் இராமச்சந்திரனின் அழைப்பில் உயர் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

அது மட்டுமல்லாது நாளை சனிக்கிழமை வறணி சுட்டிவேரம் அம்மன் ஆலய தேர் திருவிழாவிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ புகைரதத்தில் யாழிற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சர்   யாழிற்கு இன்று விஜயம்..!