திருகோணமலையில் காதலனை தேடி சிக்கிய 13 வயது சிறுமி!

0
588

திருகோணமலையில் இளைஞரொருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலையில் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் – மதவாச்சி பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியை கையடக்கத் தொலைபேசியின் மூலம் 19 வயதான குறித்த இளைஞர் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அச்சிறுமி தனது காதலனான குறித்த இளைஞரை தேடி வந்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியை சிறுமியின் உறவினர்களுக்கு தெரியாது வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளதாக குற்றம்சாட்டி இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் காதலனை தேடி வந்து சிக்கிய 13 வயது சிறுமி!