மன்னார் இரட்டை கொலை: மேலும் 6 பேர் கைது!

0
483

மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று (22-06-2022) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (10- 06-2022) காலை இடம்ப்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை: மேலும் 6 பேர் சிக்கினர்

இவ் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்ளையும் நேற்று (22) புதன்கிழமை காலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்றையதினம் (22) உத்தரவிட்டார்.

இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை: மேலும் 6 பேர் சிக்கினர்

இதுவரை குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.