அமெரிக்காவில் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளைஞன்

0
535

அமெரிக்காவில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்திய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 25 வயதான சாய் சந்திரன் என்ற இளைஞர் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் காடன் அவன்யூ பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த திங்கட்கிழமை (20-06-2022) அதிகாலை தனது காரில் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இது தொட்ர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞனை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அமெரிக்காவில் கொடூரமான முறையில் உயிரிழந்த இந்திய இளைஞன்! பொலிஸார் தீவிர விசாரணை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சாய் சந்திரன் உயிரிழப்பிற்க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரை யாரேனும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.