பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட பெண்களால் பதற்றம்!

0
499

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையிலான பெண்கள் குழுவினரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

‘தாய்மாரின் போராட்டம்’ என்ற கருப்பொருளில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட பெண்களால் பதற்றம்!