இலங்கை வந்த ஆஸி. அமைச்சரிடம் சஜித் முக்கிய கோரிக்கை!

0
384

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா வழங்கும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ நீல் (Claire O’Neill) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போதே சஜித் இவ்வாறு நன்றி தெரிவித்தார். அத்துடன் நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர் உதவிகளை வழங்குமாறும் அவர் அமைச்சர் கிளாரி ஓ நீல் (Claire O’Neill)இடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை வந்துள்ள ஆஸி. அமைச்சரிடம் சஜித்   முக்கிய கோரிக்கை!

அதேவேளை இலங்கை வந்துள்ள ஆஸி. அமைச்சர் கிளாரி ஓ நீல் (Claire O’Neill) ஜனாதிபதி கோட்டாபாய, மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வந்துள்ள ஆஸி. அமைச்சரிடம் சஜித்   முக்கிய கோரிக்கை!