கிளிநொச்சியில் 19 வயது இளைஞன் மாயம்; தாயாரின் வேண்டுகோள்!

0
541

கிளிநொச்சியில் 19 வயதான இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி – இலக்கம் 72 A கனகாம்பியைக்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதான உதயராஜ் அம்சவர்த்தன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போய்யுள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

காணாமல் போன இளைஞன்  நேற்று முன்தினம் (16-06-2022) அதிகாலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்று இருந்த நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரான உதயராஜ் றோஜா தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போன தனது மகன் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், தனது கணவர் உதயராஜ் 26-12-2005 அன்று யாழ் சாவகச்சேரி மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

இன்று வரை அவர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலையில் எனது ஒரே ஒரு மகன் அம்சவர்தன் காணாமல் போயுள்ளார் என கவலை தெரிவித்தார்.

எனவே எனது அன்பு மகன் அம்சவர்தனை கண்டுபிடித்து தருமாறு கோரியுள்ளார்.

குறித்த இளைஞன் தொடர்பான தகவல் கிடைத்தால் 0741344699 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.