மேலும் 7 இலங்கையர்கள் தமிழகத்தில் புகலிடம்!

0
617

இலங்கையிலிருந்து மேலும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் புகலிடம் கோரி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

படகுமூலம் பயணித்த அவர்கள் தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் திடல் பகுதியை இன்று காலை சென்றடைந்ததாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மற்றும் திருகோணமலையில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் 4 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை பொறுப்பிலெடுத்த தமிழக கரையோர காவல்துறையினர் விசாரணைக்காக மண்டபம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.