உக்ரைன் போர் குறித்துப் பேசிய போப் பிரான்சிஸ்(Pope Francis) “ரஷ்ய படைகள் மிகக் கொடூரமாகவும் ஆவேசத்துடனும் தாக்குதல் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. யாராவது உக்ரைன் மீது போர் தொடுக்க தூண்டியிருக்கலாம்” என தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் கடுமையான விளைவுகளையும் இழப்புகளையும் சந்தித்து வரும் உக்ரைன் கடந்த சில நாள்களாக ஆயுதப் பற்றாக்குறை காரணமாக திணறி வருகிறது.
இந்நிலையில் தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையிலான சண்டை போலத் தோன்றுகிறது என்றும் ரஷ்ய படைகளுக்கு எதிராக துணிச்சலாக நின்று போராடிய உக்ரேனியர்களையும் பாராட்டினார் என தெரியவந்துள்ளது.