10 நிமிடங்கள் மட்டுமே நிலைத்த மகிழ்ச்சி; லண்டன் பெண்ணுக்கு ஏமாற்றம்

0
674

பிரித்தானியாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததாக தகவல் வழங்கப்பட்டநிலையில் அவரது மகிழ்ச்சி வெறும் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்துள்ள துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தெற்கு லண்டனில் வாழும் 72 வயதான Margaret De Micheliஎனும் பண்மணிக்கு லொட்டரியில் பரிசு கிடைத்துள்ளதாக உள்ளூர் தபால் நிலையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த அந்த பெண்மணி பெரும் கற்பனையில் இருந்துள்ளார். அதோடு தமது பழைய வீட்டில் இருந்து வெளியேறி கடலோரமாக ஒரு வீடு வாங்கவேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாக இருந்துள்ளது.

அடுத்ததாக, அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து, 5.00 மணிக்கெல்லாம் வேலைக்கு செல்லும் தன் கணவருக்கு ஓய்வு கொடுத்து, அவரை வீட்டில் உட்கார வைத்து அழகு பார்க்கவேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டுள்ளார்.

Dorsetஇலுள்ள Poole நகரில் ஒரு அழகான வீடு வாங்கிவிடவேண்டும். அப்படியே கடலோரமாக காற்று வாங்கிக்கொண்டே கணவருடன் ஓய்வு காலத்தை செலவிடவேண்டும் என்ற கற்பனையுடன் அவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், அருகிலுள்ள லொட்டரி நிலையத்துக்கு சென்று தனது லொட்டரி எண்களை இன்னொரு முறை சரிபார்க்கச் வேண்டும் என அவர் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு அந்த ஏமாற்றமளிக்கும் செய்தியை லொட்டரி நிலைய ஊழியர் சொல்லியிருக்கின்றார்.

அதாவது அவருக்கு லொட்டரியில் பரிசு விழவில்லை என்றும், தவறுதலாக அவருக்கு பரிசு கிடைத்திருப்பதாக கூறப்பட்டிருப்பதாகவும் அந்த ஊழியர் கூறியுள்ளார்.

இதனால் பெரும் ஏமாற்றமடைந்த அந்த பெண், யாருக்குத் தெரியும் என்றாவது ஒரு நாள் எனக்கு லொட்டரியில் பரிசு விழலாம் என கூறியதுடன், அதிகம் வேண்டாம், 25,000 பவுண்டுகள் பரிசு கிடைத்தால் கூட போதும் என அவர் கூறியுள்ளார்.