உலகக் கோப்பைக்கு வடக்கு வீர வீராங்கனைகள் தேர்வு

0
504

இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா, கிளிநொச்சி [கிளி/மத்திய கல்லூரி மாணவி] மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த வீர வீராங்கனைகள் வெற்றிபெற்று உலகக் கிண்ண போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

சிறிலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெற்ற உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் தெரிவுப் போட்டியில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று நாட்டுக்கும் தாம் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்நிலையில் இம் மாதம் 27ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமான தெரிவு போட்டிகள் 30 ஆம் திகதி நேற்றுடன் முடிவுற்றது. குறித்த போட்டியில் இலங்கை, இந்தியா, இத்தாலி நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தார்கள்.

போட்டியில் கிக்பொக்சிங் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளிப் பதக்கமும், மல்யுத்த போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களும் பெற்று மொத்தமாக 7 பதக்கங்களை பெற்று வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தங்க பதக்கத்தினை பெற்ற வீர, வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை இந்தியாவில் இருந்து பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அங்கு இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் ஆசிய மிக்ஸ் பொக்சிங் சங்கத்தின் தலைவரும் பயிற்றுனருமாகிய செல்வரத்தினம் நந்தகுமார் தலைமையில் வீரர்கள் போட்டிக்கு சென்று பதக்கங்களை பெற்றிருந்தனர்.