பிரான்சில் திருமணம் செய்த யாழ் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

0
935

பிரான்சில் வசிக்கும் ஈழ தமிழ் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனது முறை மச்சாளை திருமணம் செய்வதாக இந்தியாவிற்கு அழைத்து தாலி கட்டி ஒரு மாதம் குடும்பம் நடாத்திவிட்டு பாரிஸ் திரும்பியுள்ளார்.

ஊர் திரும்பிய மச்சாளுடன் கதைப்பதை நிறுத்தியதுடன், இந்தியா சென்று திரும்பிய பின்னர் அவர் கதைப்பதை முழுதாக நிறுத்தி விட்டு அவர்பாட்டுக்கு பிரான்சில் இருந்துள்ளார்.

மச்சாள், மாமன் குடும்பம் மாப்பிள்ளையுடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனில்லாமல் போகவே களைத்து போய் அப்படியே விட்டுள்ளனர்.

பின்னர்தான் அவர் பற்றி உண்மைகள் தெரிய வந்துள்ளது.

போதை பொருள் மதுவிற்கு முழுமையாக அடிமையான மச்சான் ஒழுங்காக வேலையும் போகாமல் பாரிசில் வெட்டியாக ஊர் சுற்றி பொழுதை போக்கும் ஒருவர் எனத் தெரிய வந்துள்ளது.

மச்சாளை திருமணம் என்ற பெயரில்  ஏமாற்றிவிட்டு எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் பாரிஸ் வாழும் இவரைப் பற்றி பெண் வீட்டார் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

குறித்த பாதிக்கப்பட்ட பெண், அம்மா – அப்பா பேச்சை கேட்டு வெளிநாட்டு மச்சானை கல்யாணம் செய்ய தலையாட்டியதை தவிர வேற எந்த பிழையும் செய்யவில்லை அயல் வீட்டார் ஆதங்கம் வெளியிட்டுள்ளர்.