இலங்கையில் இளைஞர்களுக்காக உருவாகும் புதிய கட்சி!

0
595

இலங்கையில் எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த புதிய அரசியல் கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 இந்த புதிய அரசியல் கட்சியில் ஏற்கனவே சுமார் 10 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு சில சிவில் அமைப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இவ்வாறான நிலைமையில், ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைவது சம்பந்தமாக பல கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர், யுவதிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரம்பரிய அரசியலில் இருந்து விடுப்பட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.