வெளிநாடொன்றிற்கு செல்ல முயன்ற 45 பேரை கடற்படையினர் கைது!

0
740

கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடொன்றிற்கு செல்ல முயன்ற மேலும் 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 45 நபர்களுடன் சந்தேகத்திற்கிடமான 02 உள்ளூர் மீன்பிடி இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளனர்.

தெற்கு கடற்பரப்பில் 26 பேருடன் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட பல நாள் மீன்பிடி படகை, 19 பேருடன் கடற்படையினர் கைப்பற்றினர்.

சனிக்கிழமை (27-05-2022) மேற்கு கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​சந்தேகத்திற்கிடமான 19 நபர்களை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை இடைமறித்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் கல்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.