நள்ளிரவில் திருடன் போல நாட்டுக்குள் நுழைந்த யோசித ராஜபக்ச!

0
597

இலங்கையிலிருந்து மே 9 ம் திகதி வெளியேறிய யோசித ராஜபக்சவும் அவரது மனைவியும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

யோசித ராஜபக்ச தம்பதியர் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி யோசித ராஜபக்ச மற்றும் நிதீச ஜயசேகர ஆகிய இருவரும் இரவு வர்த்தகரீதியில் முக்கியமான நபர்களிற்கான பகுதி ஊடாக விமானநிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அத்துடன் இருவரும் கறுப்பு உடையணிந்திருந்ததாகவும், அவர்களை விமானநிலையத்திற்கு வெளியே சிலர் வாகனத்தில் ஏற்றிச்சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் யோசித ராஜபக்ச மே 9 ம் திகதி காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்றார் அதன் பின்னர் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னனியில் யோசித செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.