இலங்கைக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள அமெரிக்க அமைப்பு

0
392

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு ஏஜன்சியின் (US Agency for International Development, USAID) நிர்வாகியான சமந்தா பவர் (Samantha Power) நேற்று இலங்கை பிரதமரான ரணில் விக்கிரமசிங்க உடன் தொலைபேசியில் உரையாடியது குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு ஏஜன்சி, இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுடன் அரசியல் குழப்பங்களும் சேர்ந்துகொள்ள மின்தடை, எரிபொருள், உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு முதலான பிரச்சினைகள் காரணமாக மக்கள் போராட்டங்களில் இறங்கும் ஒரு சூழல் உருவாயிற்று.

இந்நிலையில், நேற்று இலங்கை பிரதமரான ரணில் விக்கிரமசிங்க உடன், அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு ஏஜன்சியின் நிர்வாகியான சமந்தா பவர் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அப்போது, இந்த மாதம் அரசியல் பிரச்சினைகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்த இலங்கையர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட சமந்தா, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு ஏஜன்சி, இலங்கை மக்களுக்கு தனது ஆதரவை அளிக்கத் தயாராக இருப்பதாகவும், பிரச்சினைகளை தீர்க்க உதவியளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.