கனடாவில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்!

0
395

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு (2022) டர்ஹாம் பிராந்தியத்தில் இடம்பெற்ற ஆறாவது படுகொலையில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிக்கரிங்கைச் சேர்ந்த 20 வயதான அரவின் சபேசன் என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அவரது மரணத்தை கொலை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் ப்ரோக் சாலைக்கு மேற்கே உள்ள டவுன்டன் வீதியில் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா கார் ஒன்று மோதியதற்காக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் உள்ளே இருந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்தியத்தின் பொலிஸார் கூறியுள்ளனர்.