ஹரீன் மற்றும் மனுஷ நாணயக்கார மீது சஜித் பிரேமதாஸ குற்றசாட்டு

0
425

 எமது கட்சியின் தீர்மானத்தை மீறி அரசு பக்கம் சாய்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சிjohnny manziel jersey custom made football jerseys college football jerseys deuce vaughn jersey drew allar jersey drew allar jersey custom football jerseys OSU Jerseys college football jerseys deuce vaughn jersey asu jersey OSU Jerseys Ohio State Team Jersey brock purdy jersey brock purdy jersey த்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் இருவரினதும் இந்தச் செயற்பாடு மிகவும் அருவருக்கத்தக்கது எனவும் சஜித் க்கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் நல்ல கருமங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கும் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை எனவும் நாம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம்.

இந்நிலையில், ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் எமது கட்சியின் முடிவை மீறிச் செயற்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், ஹரீனுக்கும் மனுஷவுக்கும் அமைச்சுப் பதவிகளை அரசு வழங்கியுள்ளதால் அரசுக்கான எமது ஆதரவு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூடி பரிசீலிக்கும் எனவும் சஜித்பிரேமதாச ஊடகங்களிடம்   தெரிவித்தார்.