இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்!

0
453

இரு கப்பல்களிலிருந்து எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வந்த இரு கப்பல்களிலும் ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்பன உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.