வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளர் நியமிக்கப்படவுள்ளார்

0
375

வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான முன்மொழிவை செய்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளார்.

அவர், வெளிநாட்டு சேவையில் பணியாற்றிய மூத்த அதிகாரி என்பதும் அந்த சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வுப் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் அவர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பதவியை தக்கவைத்துக் கொள்ள அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மேற்கொண்ட இறுதிநேர முயற்சியும் தோல்வியடைந்தது.

இதனையடுத்து அவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று தமது அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட உடமைகளை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார்.