தமிழினப்படுகொலையை அங்கீகரித்தமைக்கு நன்றி தெரிவித்த கனடியத் தமிழர் தேசிய அவை

0
729

தமிழுனப்படுகொலையை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஐ தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கும் வகையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டமைக்காக கனடிய நாடாளுமன்றத்திற்கு, கனடியத் தமிழர் தேசிய அவை நன்றி தெரிவித்துள்ளது.

இந்தத் தீா்மானத்தைக் கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கும், இதனை ஆதரித்த லிபரல் கட்சி, கன்சர்வேடிவ், புதிய ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி, பிளாக் கியூபெகோயிஸ் மற்றும் சுயேச்சைகள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கனடியத் தமிழர் தேசிய அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்து இனப்படுகொலை என கனடிய பாராளுமன்றம் கடந்த 18 ஆம் திகதி ஏகமனதாக ஏற்று அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடிய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை ஏற்று அங்கீகரித்த உலகின் முதல் பாராளுமன்றமாக கனடா பாராளுமன்றம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.