எரிபொருளினை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

0
299

இரண்டு கப்பல்களில் இருந்து இன்றைய தினம் பெற்றோல் மற்றும் டீசலினை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் நேற்று காலை முதல் 92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.