கொழும்பில் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

0
768

கொழும்பு – மருதானை பகுதியில் பன்சல வீதியை மறித்து மக்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.

பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியாமையினால் குழப்பமடைந்த மக்கள் வீதியை மறித்து இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மக்களை வரிசைப்படுத்தி பெட்ரோலை பெற்று கொள்ள உதவியுள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.