பொருளாதார நெருக்கடி குறித்து அனைத்து கட்சிகளையும் வலியுறுத்திய பிரித்தானியா!

0
616

இலங்கை கடந்த சில மாதங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்குள் சிக்கி தவித்து வருகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இது குறித்து பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு (Tariq Ahmed Prabhu) குறிப்பிடும் போது,

இலங்கையின் கடன்நிலை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என சர்வதேச நாணயநிதியம் மதிப்பிட்டுள்ளது, எனவும் நாட்டின் கடனை பேண்தகுநிலைக்கு மாற்றுவதற்கு அவசியமான சீர்திருத்தங்கள் நிதி உதவிகள் குறித்து சர்வதேச நாணயநிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் கடன்கள் நிலைபேற்றவையாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தினால் மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம் என்று தெரிவித்துள்ள அவர்,

மக்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் தற்போதைய சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கான வழிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனநாயக முறைப்படி ஆராயவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.