படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பலி!

0
581

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதோடு இவ்வாறு உயிரிழந்தவர் இறக்ககண்டி வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய துஷ்யந்தன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று இளைஞர்கள் இணைந்து படகில் சென்றபோது படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்ற இருவர் தப்பியதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குறித்த இளைஞனின் சடலம் தற்பொழுது நிலாவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.