நாளை நினைவேந்தல் குறித்து தீவிரப்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகள்!

0
597

  நாளையதினம் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் அங்கு இராணுவம், பொலிஸார் அப்பகுதிகளை சூழ நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று நண்பகல் முதல் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் உள்ளக வீதிகள் மற்றும் நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையான பகுதிகளில் பொலிஸார் ,இராணுவம், புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது.

அத்தோடு நினைவேந்தல் வளாகத்தை சுற்றி இராணுவ வாகனங்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்து அங்கிருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.