மசூதி வளாகத்தில் சிவலிங்கம்; மூட நீதின்றம் உத்தரவு!

0
533

இந்தியவின் உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டருக்கு வாரணாசி நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையில் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஞானவாபி மசூதி வளாகத்தில் இன்று மூன்றாம் நாள் வீடியோ ஆய்வுப் பணி நடைபெற்றது. சுமார் 65 சதவீத ஆய்வு நிறைவடைந்த நிலையில் இன்று கடைசி கட்ட காணொளி பதிவு தொடங்கியது.

இது குறித்து ஆய்வுப்பணி முடிவடைந்த பின் பேசிய ஆய்வு பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த துணை கமிஷனர் ஒருவர் கூறுகையில், விரைவில் எங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சிப்போம். வீடியோ ஆய்வு பணிகள் தடையின்றி நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் அப் பகுதிக்குள் யாரும் நுழைய கோர்ட்டு தடை விதித்ததுடன், அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.