ரணிலின் பிரதமரானதன் பின்னணியில் இந்தியா உள்ளதா?

0
648

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக பலரும் கூறுகின்றார்கள் என்றும், எனினும் நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரை சந்தித்தபோதே பாக்லே இதனை கூறினார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே நேற்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமாகவுள்ளது. ஓர் உறுதியா உறுதியான அரசு அமையப்பெற வேண்டும். அப்போதுதான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியும். ஓர் உறுதியான அரசு அமையப்பெற வேண்டும் என்பதில் கரிசனை செலுத்தினோம். அதேவேளை, பிரதமராக ரணில் அல்ல வேறு யார் வந்தாலும் நாம் தொடர்ந்து பணியாற்றியிருப்போம் என்றும் கூட்டமைப்பின் தலைவரிடம் இந்தியத் தூதுவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.