இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

0
386

நாட்டில் வெசாக் நோன் மதி தினத்தை முன்னிட்டு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எரிபொருள் இல்லாமை காரணமாக 8 மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்மின்னுற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.