டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மறுத்த பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

0
656

களஞ்சியசாலையில் போதியளவு டீசல் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மறுத்த அவர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலையில் இருந்து போதுமான அளவு டீசல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விடுவிக்கப்பட்டது.