இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் நீண்டதூர தொடருந்து சேவைகள்!

0
578

நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1971 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.