காலி முகத்திடலில் ”ரணில் – ராஜபக்ஷ வீட்டுக்குச் செல்லுங்கள்” என கோஷமிட்ட மக்கள்!

0
717

ஆறாவது தடவையாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்ததற்கு பதிலளிக்கும் வகையில், காலி முகத்திடலை ஆக்கிரமிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ‘ரணில் – ராஜபக்ஷ வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்று கோஷமிட்டதைக் கேட்க முடிந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி தாம் நடத்திய போராட்டத்திற்கு ரணில்-ராஜபக்ஷ கூட்டணி பதில் இல்லை என்று போராட்டக்காரர்கள் கருதுவதாக போராட்ட களத்தில் இருந்த ஒருவர் கூறியுள்ளார்.

பிரதமர் பதவியில் ஆட்களை மட்டும் மாற்றி தனது ஜனாதிபதி பதவியை தாக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இது ராஜபக்சவை மூடிமறைக்கும் முயற்சியா என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மற்றொரு செயற்பாட்டாளர் கூறியுள்ளார்.