ராஜபக்ஷர்களின் மீட்பர் ரணில் … அனுரகுமார சீற்றம்

0
543

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் மீட்பர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியும் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் தீர்மானத்தை நிராகரித்ததுடன், அரசியல் தீர்மானங்கள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் சதியை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணில் கோட்டாபய ராஜபக்ஷவை நம்புவதாகவும், இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் அவர்களின் சதியில் இம்முறை சிக்கமாட்டார்கள் எனவும் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஓமல்பே சோபித்த தேரர், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட சமயத்தலைவர்கள் ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.