குடும்பமொன்றின் மீது பொய்க்குற்றம் சுமத்திய பொலிஸார்

0
1137

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணிப் பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.

இராமநாதபுரம் பகுதியில உள்ள பொலிஸ் நிலையத்திலிருந்து முச்சக்கர வண்டியில் சென்ற பொலிஸார் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் இருப்பதாக தெரிவித்து வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை கைது செய்ததால் பொலிஸாருக்கும் வீட்டிலிருந்தவர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் கர்ப்பிணிப் பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸார் (Photos)

இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டிலிருந்த கர்ப்பினிப் பெண் மற்றும் நோய்வாய்ப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞரின் தாயார் ஆகியோர் மீதும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் கர்ப்பிணிப் பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸார் (Photos)

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உயர் அதிகாரிகள் நிலமைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.