இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட முக்கிய பதிவு!

0
495

இலங்கையில் இருந்து சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக பரப்பப்படும் செய்திகள் போலியானவை என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருவதை அவதானித்துள்ளோம்.

இவை போலியானவை, தவறான தகவல்கள், அதில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை முற்றாக மறுப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.