கிளிநொச்சியில் கைத்துப்பாக்கியுடன் கைதி தப்பியோட்டம்

0
826

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் கைத்துப்பாக்கியை பறித்துகொண்டு கைவிலங்குடன் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக எமது  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.