இங்கிலாந்து கவுன்சிலின் துணை மேயராக இந்தியப் பெண்!

0
457

தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தின் ஆம்ஸ்பரி டவுன் கவுன்சில் துணை மேயராக பொறுப்பேற்று இருக்கிறார்.

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த மோனிகா தேவேந்திரன் பள்ளி, கல்லூரி படிப்புகளை தம்மிழகத்தில் முடித்து மருத்துவர் ஆனார். அதன் பின் திருமணம் செய்து கொண்ட மோனிகா தேவேந்திரன் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார்.

இங்கிலாந்தில் பல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மோனிகா தேவேந்திரன், கடந்த ஆண்டு ஆம்ஸ்பரி மேற்கு மாவட்ட இடங்களுக்கான கவுன்சிலர் ஆக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் இடம்பெற்ற மாநகர தேர்தலில் மோனிகா தேவேந்திரன் போட்டியிட்டார். இதில் நகர மன்ற உறுப்பினர்களால் மோனிகா தேவேந்திரன் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். உலக புகழ் பெற்ற ஸ்டோன்பென்ச் மாநகராட்சி ஆம்ஸ்பரியின் கீழ் வருகிறது.

Gallery

“நான் மற்றவர்களுடன் பழகும் விதம், சேவை மனப்பான்மை உள்ளிட்டவைகளை பார்த்து கவுன்சிலர்கள் இந்த பதவிக்கு என்னை தேர்வு செய்து இருக்கின்றனர்.

இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கவுன்சிலர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன். இனி மக்களுக்கு மேலும் அதிக சேவைகளை செய்து, மக்கள் மத்தியில் நிரந்தர இடம் பிடிப்பேன்” என மோனிகா தேவேந்திரன் தெரிவித்தார்.

“இங்கிலாந்தில் எம்.பி.யாக வேண்டும் என்பதே எனது ஆசை. இதோடு சொந்த ஊருக்கு திரும்ப வரவும் ஆவலோடு இருக்கிறேன். இங்குள்ள பணிகளை பூர்த்தி செய்து, இந்தியா வந்து எனது வெற்றியை பகிர்ந்து கொள்வேன்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இங்கு ஏறக்குறைய 1,200 ஆண்டுகளாக இந்த பதவி இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. நான் பழகும், விதம், சேவை மனப்பான்மையை பார்த்து கவுன்சிலர்கள் என்னை இந்த பதவிக்கு தேர்வு செய்துள்ளனர்.

இதனால் மிகுந்த சந்தோஷமடைகிறேன். என்மீது வைத்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். மக்களுக்கு இன்னும் அதிக சேவைகள் செய்து நல்ல பெயர் எடுத்து மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிப்பேன் எனவும் மோனிகா தேவேந்திரன் கூறியுள்ளார்.