இலங்கை மக்களுக்கு தமிழக சிறுமி செய்த செயல்!

0
673

இலங்கையில் நிலவிவரும் பெரும் பொருளாதார நெருக்கடியால் தவித்துவரும் இலங்கை மக்களுக்கு  தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் மூலமான சேமிப்பு பணத்தினை வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம் – கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 இந்திய ரூபாய் பணத்தினை இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கியுள்ளார்.

மேலும் இதுகுறித்து சிறுமி தெரிவித்தது,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதால் இலங்கை மக்களுக்காக தனது சேமிப்பு பணத்தினை அன்பளிப்பாக வழங்குவதாக கூறியுள்ளார்.

மேலும், சிறுமியின் இந்த செயற்பாட்டை மாவட்ட ஆட்சியாளர், பாராட்டி உள்ளார்.