மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி! மத்திய வங்கி தகவல்

0
462

இலங்கையில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆணடு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த வருடம் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4,238,760 ஆக குறைவடைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு 4,272,289 ஆக காணப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 33,529ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 31,174 இனால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஏனைய பாடசாலைகளில் 2,055 இனால் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, நாடாளவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2020 உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 994 இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.