க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

0
808

நேற்றைய தினம் நடைபெற்ற (06-05-2022) நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.