ஹர்த்தாலால் களையிழந்த யாழ் மாவட்டம்!

0
457

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கம் வீடு செல்லவேண்டும் எனக்கோரி இன்றைய தினம் நாடு தழுவிய ஹர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது.

நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்தால்லால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தது. எனினும் இ.போ.ச பேருந்து சேவைகள் இடம்பெற்றபோதும் தனியார் சேவைகள் இயங்காதிருந்தது.

இதனால் நகர வீதிகள் வெறிச்சோடி இருந்ததுடன் வங்கிகள் பூட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இதேபோல் வடக்கிழக்கு மாகாணங்களின் முக்கிய பெருநகரங்கள் சோபையிழந்து காணப்பட்ட அதேசமயம் எனினும் எங்கும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.