கொரோனா தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்தான இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு!

0
775

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி காரணமாக உயிருக்கு ஆபத்தான இரத்த உறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்தான இரத்த உறைவு வாய்ப்பிருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அவசரம் கருதி தொடர்புடைய தடுப்பூசி அளிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எஞ்சிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசியை அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.