நெருக்கடியில் கைகொடுக்கும் பங்களாதேஷ்!!

0
549

இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதை பங்களாதேஷ் உறுதி செய்துள்ளது.

இதேவேளை, சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்பொழுது பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.