ரஷ்ய பணக்காரகளுக்கு புகலிடமாக மாறியுள்ள துபாய்!

0
701

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பி ஓடும் பணக்கார ரஷ்யர்களுக்கு துபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் ரஷ்ய போரினால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது. அந்தவகையில் ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் ம் இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்துள்ளதாக வணிகத் தலைவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அதேவேளை 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரஷ்யர்களால் துபாயில் சொத்து வாங்குதல் 67% அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உலகநடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை.

அதேசமய்ம் நேரத்தில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பையும் விமர்சிக்கவில்லை. உக்க்ரைன் ரஷ்ய போரினால் கடந்த இரண்டு மாதங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய பொருளாதார நிபுணர் ஒருவர் கூறுகையில்,

போர் தொடங்கிய முதல் 10 நாட்களில் 200,000 ரஷ்யர்கள் வெளியேறிவிட்டனர். துபாயில் செயல்பட நிறுவனங்களுக்கு உதவும் Virtuzone, ரஷ்ய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது.

அதேவேளை நாட்டின் பொருளாதார சரிவு குறித்து ரஷ்யர்கள் கவலைப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க துபாய்க்கு செல்கின்றார்கள் என கூறியுள்ளார்.